ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் இருக்கும் இளவங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு சேகர். இவர் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உறவுக்காரர். விவசாயத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட அன்பு சேகர், விவசாயப் பிரச்னைகளை மையமாக வைத்து 'தாகபூமி' என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார். அந்த குறும்படத்தின் கதையைத் திருடி, நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' படம் எடுக்கப்பட்டதாக, 2014ல் பிரச்னை கிளப்பினார் அன்பு சேகர்.
ஆனால், பிரமாண்டத்துக்கு மத்தியில் அன்பு சேகரின் குரல் எடுபடாமலேயே போனது. விடாத அன்பு சேகர், கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து நியாயம் கேட்டார். கால விரயம்தான் ஏற்பட்டதே தவிர, அன்பு சேகருக்கு நியாயம் கிடைக்கவில்லை.
இதனால், நியாயம் கேட்டு, சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் முன்பாக, குடும்பத்தினருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் அன்பு சேகர். அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதால் உண்ணாவிரதம் இருந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை, சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
'இனியாவது அன்பு சேகருக்கு நியாயம் கிடைக்குமா?' என்பதுதான் அவரது குடும்பத்தினரின் கேள்வி.