சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
தென்னிந்தியத் திரைப்படங்களின் மார்க்கெட் 'பாகுபலி' படத்திற்குப் பிறகு இந்திய அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளன. 'பாகுபலி' படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம் ஆகியவை இந்திய அளவில் நல்ல வசூலைப் பெற்றன. அதோடு, தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யு டியூபில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று அதிலும் ஒரு சாதனையைப் படைத்து வருகின்றன.
550 கோடி ரூபாய் தயாரிப்பு என பேசப்படும் '2.0' படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படுவதாக அறிவித்தார்கள். ஆனால், படத்தை தமிழில் மட்டுமே நேரடியாகப் படமாக்கியுள்ளார்கள். தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் படத்தை டப்பிங் மட்டுமே செய்கிறார்கள்.
2.0 படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. யு டியூபில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி டிரைலரின் தணிக்கைச் சான்றிதழில் “தமிமிழிலிருந்து டப்பிங் செய்யப்பட்டது” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
'பாகுபலி' படங்களும் தெலுங்கில் மட்டுமே நேரடியாகப் படமாக்கப்பட்டன. மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுதான் வெளியானது. அதை உதட்டசைவை வைத்து படம் வந்த பிறகுதான் கண்டுபிடிக்க முடிந்தது. அந்தப் படத்தையும் முன்னதாக தமிழில் நேரடியாக எடுத்ததாக பொய்யாக விளம்பரப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.