சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம், தீபாவளி தினமான நாளை(நவ., 6) வெளியாகிறது. ரசிகர்கள் கொண்டாட்டங்களை தொடங்கி உள்ள நிலையில், பைரசி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ், சர்கார் படத்தின் ஹெச்.டி., விரைவில் வெளியாகும் என மிரட்டல் விடுத்து, திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கடந்த 23-ம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, நவ., 6-ம் தேதி வெளியாகும் திரைப்படங்களை, தியேட்டரில் எவரேனும் வீடியோ கேமராவிலோ அல்லது மொபைல் போனிலோ படம் எடுக்கிறார்களா என்று கண்காணிக்க, அந்தந்த தியேட்டர்கள் உரிமையாளர்கள் ஆட்களை நியமிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தோம். மேலும் எல்லா தியேட்டர்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சொல்லியிருந்தோம். அதை இக்கடிதம் வாயிலாக நினைவூட்டுகிறோம்.
தற்போது தமிழ்ராக்கர்ஸ் என்ற நம் உழைப்பை சுரண்டும் திருடன், சர்கார் படம் வெளியாகும் அன்றைய தினமே படத்தின் ஹெச்.டி., பிரின்ட்டை மாலை வெளியிடுவோம் என சமூகவலைதளங்களில் சவால் விட்டுள்ளனர். நாம் ஒன்றாக இணைந்து மேற்படி தியேட்டர்களில் கண்காணிப்பு ஆட்களை நியமித்து, தீவிரமாக கண்காணித்து, எவரேனும் படம் பிடித்தால் அவர்களை உடனடியாக போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.