பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'மீ டூ ஹேஸ்டாக்' மூலம் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான பெண்கள், குறிப்பாக நடிகைகள், தினமும் பல ஆண்களை குறித்து பதிவிட்டு வருகின்றனர். உலகம் முழுவதும், இந்தப் பிரச்னை சமீப நாட்களாக கொதி நிலையில் இருக்கிறது.
இந்நிலையில், பிரபல நடிகர் ஒருவர் மீது, தெலுங்கில் 'ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா' மற்றும் தமிழில் 'வேறென்ன வேண்டும்' என்ற படத்திலும் நடித்து வரும் பிரர்னா கண்ணா என்ற இளம் நடிகை, நடிகர் ஒருவர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிறார்.
அவர் 'மீ டூ ஹேஸ்டாக்' பதிவில் கூறியிருப்பதாவது : எனது அப்பா வயதுள்ள நடிகர் ஒருவர், ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு என்னை வரவழைத்து பாலியில் ரீதியில் என்னை சீண்டினார். அவர் புதிதாக இயக்கி நடிக்கவிருக்கும் படத்தில் என்னை நடிக்க வைப்பது குறித்து பேச வேண்டும் எனக் கூறி, ஓட்டலுக்கு என்னை வரவழைத்தார். என்னுடைய ஐலைனரை அழிக்க வேண்டும் என்றார். அதை ஏற்று, ஓட்டலில் இருந்த பாத்ரூமுக்குள் நான் சென்றேன். என் பின்னாலேயே வந்த அவர், என்னை இறுக கட்டி அணைத்து முத்தமிட முயன்றா. திமிறிக் கொண்டு நான் ஓடி வந்தேன். என் வயதில், அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், அந்த நடிகர் நடந்து கொண்டது, எனக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அந்தப் பதிவில் பிரர்னா கண்ணா கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த பிரபல நடிகர் யார் என்பது குறித்த தேடுதல், கோலிவுட் வட்டாரங்களில் துவங்கி உள்ளது.