ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, பலரும் இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெண்களை அனுமதிக்க மறுக்கும் கடவுள் எனக்கும் வேண்டாம் என கூறியுள்ளார்.
சமீபத்தில் ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜ், அங்கே நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது, “நாம் எல்லோரும் பெண்களின் வயிற்றில் இருந்து தான் பிறந்தோம். என் தாய்க்கு வழிபாடு மறுக்கும் மதம் மதமே அல்ல.. கடவுளை வழிபடக்கூட நிபந்தனைகள் விதிக்கும் பக்தர்கள் உண்மையான பக்தர்களே அல்ல.. அதேபோல என் தாயை கோவிலுக்குள் நுழைய வேண்டாம் என தடுக்கும் கடவுளும் உண்மையான கடவுள் அல்ல, அது எனது கடவுளும் இல்லை” என கூறியுள்ளார்.