தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகுமார் தன்னை செல்பி எடுத்த ஒரு பையனின் செல்போனை தட்டிவிட்டது சர்ச்சையானது. இதில் சிவகுமாருக்கு எதிராகவே பலரும் கருத்து கூறினார்கள். அதேசமயம் சமீபத்தில் காசர்கோட்டில் உள்ள ஒரு மசூதிக்கு வழிபட சென்ற மம்முட்டிக்கும், இதேப்போல ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
காரில் இருந்து மசூதிக்குள் செல்ல மம்முட்டி நடந்து வந்தபோது, ஆர்வக்கோளாறில் சில இளைஞர்கள் செல்பி எடுத்தனர். அவர் ஒன்றும் பேசாமல் நடந்து போனாலும், அவருடன் வந்தவர்கள் செல்பி எடுத்தவர்களின் கையில் இருந்து மொபைல் போனை பறித்து, மறுபடியும் அவர்கள் கையிலேயே கொடுத்தனர்.
மசூதி அருகில் சென்ற மம்முட்டி, “செல்பி எடுப்பதில் தவறில்லை. ஆனால் மசூதி போன்ற வழிபாட்டு தலங்களில் இளைஞர்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்” என கூறியதும், சைலன்ட்டான இளைஞர்கள், செல்போனை ஆப் செய்துவிட்டு வழிபாட்டுக்காக மசூதிக்குள் நுழைந்தனராம்.