தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த செப்-25ல் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் மற்றும் வயலினிஸ்ட்டான பாலா பாஸ்கர் மற்றும் அவரது மனைவி, குழந்தை பயணித்த கார் திருவனந்தபுரம் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். சிகிச்சை பலனின்றி இசையமைப்பாளர் பாலா பாஸ்கரும் இறந்தார்
கவலைக்கிடமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலா பாஸ்கரின் மனைவி தற்போது ஓரளவு குணமாகி வீடு திரும்பியுள்ளார். இந்த விபத்து நடைபெற்றபோது பாலா பாஸ்கர் தான் கார் ஓட்டினார் என்றும், தான் கொஞ்ச நேரம் ஒய்வு எடுக்கும் விதமாக தூங்கிகொண்டு இருந்ததாகவும் கார் ட்ரைவர் அர்ஜுன் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது போலீஸ் விசாரணையின்போது பாலா பாஸ்கரின் மனைவி, விபத்து நடந்தபோது என் கணவர் கார் ஒட்டவில்லை. அர்ஜுன் தான் காரை ஓட்டினார் என கூறியுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து தான் என்றாலும், டிரைவர் அர்ஜுன் ஏன் அப்படி மாற்றி கூறினார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.