ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தீபாவளிக்கு வெளியாக திட்டமிடப்பட்ட விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு புடிச்சவன்' படம் கடைசி நேர சிக்கலில் வெளியாகாமல் தள்ளிப் போய்விட்டது. படத்திற்கு வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான பண வரவு வராததால் தான் படம் தள்ளிப் போனது என்கிறார்கள்.
படத்தை நவம்பர் 16ம் தேதி வெளியிட தற்போது திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால், தயாரிப்பாளர் சங்க வெளியீட்டுக் குழு முடிவின்படி ஏற்கெனவே, “காற்றின் மொழி, உத்தரவு மகாராஜா, செய், சித்திரம் பேசுதடி 2, ஆர்கே நகர்” ஆகிய படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்துள்ளது.
அதே சமயம், அன்றைய தினம் வெளியிடப் போவதாக 'அடங்க மறு, சீதக்காதி' ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டன. நவம்பர் 16ம் தேதி சிறிய பட்ஜெட் படங்கள்தான் வெளியாக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் ஏற்கெனவே அறிவித்த நிலையில், 'அடங்கமறு, சீதக்காதி' படங்களின் தயாரிப்பாளர்களை அழைத்து படத்தைத் தள்ளி வைக்கச் சொன்னார்களாம். அவர்களும் தயாரிப்பாளர் சங்க வேண்டுகோளுக்கிணங்க படங்களைத் தள்ளிவைத்துவிட்டார்கள்.
ஆனால், 'திமிரு புடிச்சவன்' படத்தை நவம்பர் 16ம் தேதி வெளியிட வேண்டும் என விஜய் ஆண்டனியின் அடுத்த பட தயாரிப்பாளர் நெருக்கடி கொடுத்து வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.