'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நிலாக்காலம், செல்லமே, ஆனந்த தாண்டவம் படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா. தற்போது படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்த்சாமி, மாதுரி தீக்ஷித் ஜோடியாக நடிக்க இன்ஜினியர் என்ற படத்தை தொடங்கினார்.
இது அவரின் முதல் படம். இந்தப் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் என்ன காரணத்தோலோ படம் நின்று விட்டது. இப்போது இந்தப் படத்தை முடித்து வெளியிட காந்தி கிருஷ்ணா தீவிரமான முயற்சியில் இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது:
இயக்குநராக என் முதல் படம் (1997). பெரும்பகுதி முடிந்த படம், சிலபல காரணங்களால் தடைபட்டது. 15 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் பார்க்க நேரிட்டது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில், மறைந்த நண்பன் ஜீவாவின் ஒளிப்பதிவில், சுஜாதா வசனத்தில், வைரமுத்துவின் வரிகளில், தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், பிரம்மாண்டமாக வளர்ந்த படம்.
இந்தியாவைக் கலக்கிய காலத்தில் மாதுரி தீட்ஷித் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட படம் இன்ஜினியர். நான் எழுதிய திரைக்கதைகளில் என் மனதிற்கு நெருக்கமானது இன்ஜினியர். எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் அது புதிய கதைதான். என்றேனும் ஒருநாள் அதைத் திரையில் கட்டாயம் காண்பிப்பேன். தற்போதைக்கு ஒரு சோறு பதமாக, ஒரு பாடல் காட்சியை விரைவில் இணையத்தில் வெளியிடலாமா? என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.