வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
என், 25வது வயது வரை, தினம் தினம், தற்கொலை செய்யும் எண்ணத்துடனேயே வாழ்ந்தேன் என, இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான், தன் சுயசரிதையில், குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 51, தமிழ், ஹிந்தி உட்பட பல மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்து, உலக அளவில் பிரபலமானவர். ஆஸ்கர் விருது பெற்றவர்.ரஹ்மானின் வாழ்க்கையை பற்றி, அவரே கூறி, கிருஷ்ணா திரிலோக் என்ற எழுத்தாளர் எழுதிய, நோட்ஸ் ஆப் எ டிரீம் என்ற, சுயசரிதை வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், இந்த புத்தகம், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், தன் வாழ்க்கை பற்றிய, பல சுவாரஸ்யமான தகவல்களை, ரஹ்மான் பகிர்ந்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:எனக்கு, 9 வயதாகும் போது, தந்தை இறந்து விட்டார். அதன் பின், என் வாழ்க்கை ஸ்தம்பித்தது. 12 - 22 வயது வரை, அனுபவிக்காத கஷ்டங்களே இல்லை.
என், 25 வயது வரை, தினம் தினம், தற்கொலை செய்யும் எண்ணத்துடனேயே வாழ்ந்தேன். இந்த காலகட்டம் தான், என்னை எதற்கும் அஞ்சாதவனாக மாற்றியது.எனக்கு திலீப் குமார் என்று வீட்டில் வைத்த பெயர் பிடிக்கவில்லை. அந்த பெயரை, ஏன் வெறுத்தேன் என, இன்று வரை தெரியவில்லை. என் கடந்த கால கண்ணீர் வாழ்க்கையில் இருந்து, முற்றிலுமாக வெளியேறி, வேறொரு புதிய மனிதனாக மாற விரும்பினேன். இதனால் தான், முஸ்லிம் மதத்துக்கு மாறி, என் பெயரை ரஹ்மான் என மாற்றினேன்.இவ்வாறு அவர் கூறினார்.