'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்ட சமந்தா-நாகசைதன்யா ஆகிய இருவரும் தற்போது தெலுங்கில் சிவா நிர்வாணா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்கள். ஏ மாயா ஷேசவ், ஆட்டோ நகர் சூர்யா, மனம் படங்களைத் தொடர்ந்து அவர்கள் இணைந்துள்ள நான்காவது படம் இது.
கடந்த 3 வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் சமந்தா. அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால், இந்த படத்தில் நானும், நாக சைதன்யாவும் முதிர்ச்சியான ஒரு காதல் கதையில் நடித்து வருகிறோம். இதற்கு முன்பு நாங்கள் இணைந்த முதல் படமான ஏ மாயா ஷேசவ் படத்தில் கண்டதும் காதலில் விழுவது போன்ற ஒரு கதையில் நடித்தோம்.
ஆனால் இந்த புதிய படம் அப்படியல்ல, காதலிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் திருமணமும் செய்து கொண்டு காதலுடன் வாழ்வதை பதிவு செய்யும் படம். அதனால் ரொம்ப யதார்த்தமான கதையில் உருவாகிறது என்று கூறியுள்ளார் சமந்தா.