மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
பாலிவுட் சூப்பர் நடிகர் ஷாருக்கான் நேற்று முன் தினம் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடினார். எப்போதுமே தனது நண்பர்களுக்கு இரவு பிறந்தநாள் பார்ட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் ஷாருக்கான். அந்தவகையில் மும்பையில் உள்ள பிரபல இரவு விடுதியில் நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டியில் தனது ஜீரோ படக்குழுவினர் மற்றும் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார் ஷாருக்கான்.
ஆனால் நள்ளிரவு தாண்டியும் கொண்டாட்டம் நீண்டுகொண்டே சென்றதுடன், விடுதியில் அதிக சப்தத்தில் ஒலித்த பாடல்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக காவல்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து அங்கே விரைந்த மும்பை போலீசார் சப்தத்தை குறைக்கும்படி வலியுறுத்தினார்கள். இதனால் அப்செட்டான ஷாருக்கான் உடனே பார்ட்டியில் இருந்து பாதியிலேயே கிளம்பி விட்டாராம்.