ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளியாகும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு உயரமான கட்அவுட்டுகளை வைப்பது வழக்கம். நடிகர்களின் ஆளுயர உருவங்களை வரைந்து உயரமான கட்-அவுட்டாக வைப்பார்கள். டிஜிட்டல் பிரின்டிங் வந்த பிறகு அந்த வழக்கம் முற்றிலுமாக மறைந்து போனது. எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரது புதிய படங்கள் அந்தக் காலத்தில் வெளியான போது இப்படியெல்லாம் கட்அவுட் வைப்பார்கள்.
அப்படி மறைந்து போன கட்அவுட் கலாச்சாரத்தை கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் 'சர்கார்' படத்திற்காக இப்போது கொண்டு வருகிறார்கள். கேரள மாநிலம் கொல்லத்தில் விஜய்யின் 175 அடி உயர கட்அவுட் தற்போது உருவாகி வருகிறது. இன்று மாலை அந்த கட்அவுட்டைத் திறக்க உள்ளார்கள்.
கேரளாவில் விஜய்க்கு மலையாள ஹீரோக்களை விட அதிகமான ரசிகர்கள் உள்ளார்கள். அங்கு 'சர்கார்' படம் மிகப் பெரும் அளவில் வெளியாக உள்ளது.