10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
சர்கார் பட விவகாரம் மற்றும் சங்கத்தில் உள்ள சில பிரச்னைகள் காரணமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக பாக்யராஜ் அறிவித்துள்ளார். அவரின் ராஜினாமாவை சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : பாக்யராஜ் தலைவர் பதவியை ராஜினமா செய்வதாக கொடுத்த கடிதத்தை அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு போனில் தெரிவித்தபோது அனைவரும் ஏற்க மறுத்துவிட்டனர். அவரையே தலைவராக தொடர வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களின் கருத்தையே செயற்குழு தீர்மானமாக எடுக்கப்பட்டுவிட்டது.
எனவே எப்போதும் போல பாக்யராஜே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தொடருகிறார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.