டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தொடர்பான கதை திருட்டு பிரச்னையில் ஒரு தலைவராக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்.
செங்கோல் பட கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு அங்கீகாரம் பெற்று தந்தார். இது பாக்யராஜ்க்கு நல்ல பெயரை பெற்று தந்தாலும், சர்கார் படத்தின் முழுக்கதையையும் அவர் சொன்னது திரையுலகில் சர்ச்சையையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் பாக்யராஜ், திடீரென எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது :
நல்லபடியாக சென்றது
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என் பணிவான வணக்கம். போட்டி இல்லாமல், உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலோடு என்னை சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். நானும் மகிழ்ச்சியாக பொறுப்பு ஏற்று, மனசாட்சியோடு, நேர்மையாக செயல்படுவதாக உறுதிமொழி எடுத்து கொண்டேன். எல்லாம் நல்லபடியாக சென்றது.
அசெளகரியங்களை சந்தித்தேன்
திடீர்னு சர்கார் படம் சம்பந்தமாக சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அவர் அளித்த புகாரில் உண்மை இருந்ததால் மற்ற உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து, நல்லபடியாக நியாமாக அதை செயல்படுத்தவும் முடிந்தது. ஆனால் பல அசெளகரியங்களை சந்தித்தேன். தேர்தலில் நிற்காமல் நேரடியாக வெற்றி பெற்று வந்ததால் தான் இவ்வளவு பிரச்னைகள் என்று நினைக்கிறேன்.
சங்கத்தை காப்பாற்ற முடியாது
சங்கத்துல சில தவறான நடவடிக்கைகள் என் கவனத்துக்கு வந்தது. நிறைய விதிமுறைகளையும் மாற்றி அமைக்க வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் சரி செய்தால் ஒழிய சங்கத்தின் பெயரையும், சங்க உறுப்பினர்களின் நலனையும் காப்பாற்ற முடியாது என்று நினைக்கிறேன். அதை உடனடியாக சரி செய்ய வேண்டியதை ஒரு எழுத்தாளனாக என்னோட தலையாய கடமையாக கருதுகிறேன்.
முறைப்படி தேர்தல்
அதற்கு ஒரே வழி, நான் உட்பட என்னை மாதிரியே போட்டி இல்லாமல் பதவிக்கு வந்த எல்லோருமே ராஜினமா செய்துவிட்டு, முறையாக தேர்தல் நடத்தி மறுபடியும் பொறுப்புக்கு வருது தான். ஆனால் மற்றவர்களை நிர்பந்திக்கும் உரிமை எனக்கு கிடையாது.
சங்கம் இருக்கும் நிலையில் இப்போது தேர்தல் நடத்துவது வீண் செலவு என்று நிறையபேர் சொல்கிறார்கள். ஆனால் சங்கமே வீணாக போவதை விட செலவு வீணாவது தவறில்லை. என்னுடைய இந்த அபிப்ராயத்தை ஏற்றுக் கொண்டு ராஜினாமா செய்யலாம். அது எப்படி நடக்குது என்று பார்த்த பின்னர் தேர்தலை நடத்தினால் நான், மீண்டும் தலைவர் பதவியில் போட்டியிட்டு முறையாக தேர்தலில் நின்று, வெற்றிப்பெற்று பொறுப்பை ஏற்று, தொடர்ந்து கடமை உடன் செயல்படுவேன்.
மன்னிப்பு
எனக்கு நேர்ந்த அசெளகர்யங்கள் என்ன? ஒழுங்கினங்கள் என்ன என்பதை சங்க நலன் கருதி வெளியிட விரும்பவில்லை
சர்கார் விவகாரத்தில் முருகதாஸிடம் நான் கெஞ்சியும் அவர் உடன்படாததால் வேறு வழியில்லாமல் சர்கார் பட கதையை வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் மன்னிப்பு கோருகிறேன்.