'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏற்கனவே கத்தி தற்போது சர்க்கார் என தான் இயக்கும் படங்கள் வெளியாகும் போதெல்லாம் அப்படத்தின் கதை தொடர்பாக சர்ச்சை எழுவதால் கடும் மன உளைச்சலில் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அவருடைய அசோசியேட் டைரக்டர் ஜெகன் என்பவர் ஏ.ஆர்.முருகதாஸுக்காக உதவி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக படத்துறையில் பல காலமாகவே ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில் கதை தொடர்பாக, தன் மீது தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டு வருவதால் இனி யாரிடமும் கதை கேட்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
தன்னுடைய தயாரிப்பில் சின்ன பட்ஜெட்டில் படம் தயாரிப்பதற்காகத்தான் கதை கேட்டு வந்தாராம். இனிமேல் அப்படி கதை தேவைப்பட்டால் தன்னுடைய உதவி இயக்குனர்களிடம் கதை கேட்டு அவர்களையே இயக்குனராக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல தன்னுடைய பெயரை சொல்லி இனி யாரும் யாரிடமும் கதை கேட்கக்கூடாது என்றும் தன் சகாக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதன் மூலம் எதிர்காலத்தில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்?