இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
புதுடில்லி : பிரதமர் மோடி குறித்து, சமூக வலைதளமான, டுவிட்டரில் தரக்குறைவான கருத்தை பதிவிட்ட, பிரபல நடிகையும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, குத்து ரம்யாவுக்கு, கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர், குத்து ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தானா. குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான கன்னட மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில், கர்நாடக முன்னாள் முதல்வராக பதவி வகித்த, எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி, இவர்.
பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து, இவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்; பின், 2013ல், கர்நாடக மாநிலம், மாண்டியா லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த லோக்சபா தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், கடந்தாண்டில், காங்., சமூக ஊடகப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். பா.ஜ., குறித்து, டுவிட்டரில், இவர் பதிவிடும் சில கருத்துகள், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. சமீபத்தில், பிரதமர் மோடி குறித்து, இவர் தரக்குறைவான முறையில் தெரிவித்த கருத்து, பா.ஜ., தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில், 597 அடி உயரமுள்ள, சர்தார் படேல் சிலையை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் திறந்து வைத்தார். அந்த விழாவில், படேல் சிலையின் அருகே, பிரதமர் மோடி நின்று, மலர் துாவுவது போல, புகைப்படங்கள் வெளியாகின. அந்த புகைப்படத்தை, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகை ரம்யா, சிலைக்கு அருகே இருப்பது, பறவை எச்சமா என, கருத்து பதிவிட்டார்.
பிரதமரை, தரக்குறைவாக விமர்சித்த அவரது பதிவுக்கு, கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பா.ஜ.,வினர், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.