பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் திலகத்தின் டாப் 10 படங்களில் ஒன்று, தில்லானா மோகனாம்பாள். காலத்தை வென்று நிற்கும் காவியம் அது. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவலை அற்புதமான திரைக்காவியமாக தந்தார் ஏ.பி.நாகராஜன். சிவாஜி, சிக்கல் சண்முகசுந்தரமாகவும், பத்மினி, தில்லானா மோகனாம்பாளாகவும் வாழ்ந்த படம் அது.
ஒரு முறை வெளிநாட்டு குழு ஒன்று தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தது. அப்போது எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தார். அந்த வெளிநாட்டு குழுவுக்கு போட்டு காட்டுவதற்காக எம்.ஜி.ஆர்., நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தை தேர்வு செய்து வைத்திருந்தனர். விஷயத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., பதறிப்போய் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து திட்டினார்.
"அதுவே ஒரு ஹாலிவுட் படத்தோட தழுவல் தான் அதைப்போயி அவிங்கிட்டேயே போட்டு காட்டுவீங்களா? சிரிக்க மாட்டாங்களா என்னோட படத்துல பாட்டும் பைட்டும் தான் இருக்கும். அதை பார்த்து அவர்கள் என்ன செய்யப்போறாங்க. தில்லானா மோகனாம்பள் படத்தை காட்டுங்க, இந்த மண்ணையும், நம் கலாச்சாரத்தையும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்" என்றாராம்.
1968ம் ஆண்டு வெளியான தில்லானா மோகனாம்பாளின் பொன்விழா ஆண்டு இது. இதையொட்டி சிவாஜியின் தீவிர ரசிகரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், அப்பாஸ் கல்சுரல் அகாடமியுடன் இணைந்து 50-வது ஆண்டு விழா நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். நாளை மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரைக்கும் சென்னை வாணி மஹாலில் நடக்கிறது.
நிகழ்ச்சியில் தில்லானா மோகனாம்பாள் படத்திலிருந்து சில காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு அந்த காட்சிகள் குறித்து அறிஞர்கள் பேசுகிறார்கள். தில்லானா மோகனாம்பாள் படத்தில் பணியாற்றியவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். தில்லானா மோகனாம்பாள் படத்தில் இடம்பெற்ற பாடல்களை முன்னணி பாடகர் பாடகிகள் பாடுகிறார்கள். படத்தோடு தொடர்புடைய நடன நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.