‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகி உள்ள படம் 2.0. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாய் தயாரித்துள்ளது. சமீபத்தில் டீசர் வெளியான நிலையில் நாளை மறுநாள்(நவ.,3) டிரைலர் வெளியாகிறது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. நவ., 29-ல் படம் ரிலீஸாகிறது.
இந்நிலையில் இப்படம் பற்றி ஒரு தகவலை இயக்குநர் ஷங்கர் பகிர்ந்துள்ளார். அதில் 2.0 வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை தான் நடிக்க வைக்க எண்ணினோம். அவரும் சம்மதம் சொல்லியிருந்தார். ஆனால், இந்திய படங்களில் நடிப்பது தொடர்பாக ஒப்பந்தங்களில் சில சிக்கல் இருந்ததால் அவர் நடிக்க முடியாமல் போனது.
இதையடுத்து நடிகர் கமல்ஹாசனை நடிக்க வைக்க அவரிடம் பேசினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். மாறாக இந்தியன் 2 அல்லது வேறொரு கதையில் தனியாக நடிக்கிறேன் என கூறிவிட்டார். இதையடுத்தே நடிகர் அக்சய் குமாரை நடிக்க வைத்தோம் என கூறியுள்ளார்.