Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பில்லா பாண்டிக்கு சிக்கல்

01 நவ, 2018 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Billa-Pandi-is-in-trouble

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் பில்லா பாண்டி. இதில் இந்துஜா, சாந்தினி, விதார்த், மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையவன் இசை அமைத்துள்ளார். ராஜ் சேதுபதி இயக்கி உள்ளார். கே.சி.பிரபாத் தயாரித்துள்ளார். படம் வருகிற 6ம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் மீது, ஜெ.சா.புரொடக்சன் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஜமால் சாகிப் என்பவர் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


பில்லா பாண்டி படத்தை தயாரித்து வரும் கே.சி.பிரபாத், நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் தயாரிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார். அவரை நம்பி மருதாண்ட சீமை என்ற படத்தை தயாரித்தேன். 60 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் சொன்ன வாக்குறுதியை மீறி பில்லா பாண்டி படத்தை தயாரிக்கச் சென்று விட்டார். இதனால் மருதாண்டசீமை படம் அப்படியே நிற்கிறது. இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.


இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, மருதாண்ட சீமை படம் வெளிவந்த பிறகுதான் பில்லா பாண்டி வெளிவரும், மருதாண்ட சீமை படத்தை முடித்து தருகிறேன் என்று கூறினார். ஆனால் இப்போது மருதாண்ட சீமை படத்தை முடிக்காமல் பில்லா பாண்டியை வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனால் பில்லா பாண்டி படத்திற்கு முன் மருதாண்ட சீமை படத்தை முடித்து வெளியிட உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் பில்லா பாண்டி தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in