டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் பில்லா பாண்டி. இதில் இந்துஜா, சாந்தினி, விதார்த், மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையவன் இசை அமைத்துள்ளார். ராஜ் சேதுபதி இயக்கி உள்ளார். கே.சி.பிரபாத் தயாரித்துள்ளார். படம் வருகிற 6ம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் மீது, ஜெ.சா.புரொடக்சன் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஜமால் சாகிப் என்பவர் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பில்லா பாண்டி படத்தை தயாரித்து வரும் கே.சி.பிரபாத், நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் தயாரிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார். அவரை நம்பி மருதாண்ட சீமை என்ற படத்தை தயாரித்தேன். 60 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் சொன்ன வாக்குறுதியை மீறி பில்லா பாண்டி படத்தை தயாரிக்கச் சென்று விட்டார். இதனால் மருதாண்டசீமை படம் அப்படியே நிற்கிறது. இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, மருதாண்ட சீமை படம் வெளிவந்த பிறகுதான் பில்லா பாண்டி வெளிவரும், மருதாண்ட சீமை படத்தை முடித்து தருகிறேன் என்று கூறினார். ஆனால் இப்போது மருதாண்ட சீமை படத்தை முடிக்காமல் பில்லா பாண்டியை வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனால் பில்லா பாண்டி படத்திற்கு முன் மருதாண்ட சீமை படத்தை முடித்து வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் பில்லா பாண்டி தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.