டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆண்கள் மீது மட்டுமே கூறப்பட்டு வந்த, மீ டூ புகார், தற்போது, நடிகையர் மீதும் திரும்பியுள்ளது. பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தினார் என, நடிகை மாயா கிருஷ்ணன் மீது, மற்றொரு நடிகையே பாலியல் புகார் கூறியுள்ளது, கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா, நாடகம் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருபவர், மாயா கிருஷ்ணன். ஜேம்ஸ் வசந்தனின், வானவில் வாழ்க்கை படம் வாயிலாக சினிமாவுக்கு வந்த இவர், தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன் மற்றும் விரைவில் வெளிவர உள்ள, 2.0, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் மீது, சக நாடக நடிகையான அனன்யா ராமபிரசாத், பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தன்னை உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் இருந்து பிரித்து விட்டதாக, குற்றம் சாட்டியுள்ளார்.
துன்புறுத்தல் தெரியவில்லை
இதுகுறித்து, அனன்யா ராமபிரசாத், தன் முகநுால் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நான் பாலியல் மற்றும் மன ரீதியாக கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன். என்னை கொடுமைப்படுத்தியவர், மாயா கிருஷ்ணன். என்னை துன்புறுத்தியவர் ஆணாக இருந்திருந்தால், நான் மிக எளிதாக அதை புரிந்து, தப்பித்து இருப்பேன். ஏமாற்றியது பெண் என்பதால் தான், அவர் எனக்கு செய்த துன்புறுத்தலை தெரிந்து கொள்ள நீண்ட காலமானது. டாக்டரிடம் சென்ற பிறகே, என்னுள் ஏற்பட்ட அதிர்ச்சியை அறிந்து கொள்ள முடிந்தது.
நம்பினேன்
நான், மாயா கிருஷ்ணனை, 2016ல் சந்தித்தேன். அப்போது எனக்கு, 18 வயது; அவருக்கு, 25. அப்போது, நான் புது மாணவி. அந்த காலக்கட்டத்தில், என்டர்டெயின்மென்ட் துறையில், மாயா பிரபலமாக இருந்தார். அவர் வழிகாட்டியாக இருந்ததால், அவரை நான் முழுமையாக நம்பினேன். சில மாதங்களில், இருவரும் நெருங்கிய தோழியர் ஆனோம். மற்றவர்களை விட, மாயா மீது, நான் அதிக நம்பிக்கை வைத்தேன். ஒரு கட்டத்தில், என் பெற்றோரின் ஒப்புதலை காட்டிலும், மாயாவின் ஒப்புதல் தான் எனக்கு பெரிதாகப்பட்டது.
என் வாழ்க்கையை இயக்கிய மாயா
ஒரு கட்டத்தில், அவருடன் மட்டுமே நான் பழக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார். தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் என் அனைத்து முடிவுகளையும், மாயாவே எடுக்க துவங்கினார். மேலும், நான் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதில் துவங்கி, அனைத்திலும் மாயாவின் ஆதிக்கம் நிறைந்திருந்தது. மாயா, என் வாழ்க்கையை முழுவதுமாக இயக்க ஆரம்பித்தார்.
பாலியல் தொல்லை
என்னை பற்றி, என் நண்பர்களிடமும், அவர்களை பற்றி என்னிடமும் தவறான தகவல்களை கூறி, என்னை தனிமைப்படுத்தினார். என் தேவைகள் அனைத்தையும் மாயா அழித்தார். நான் தன்னம்பிக்கை, சுயமரியாதை, சுயமாக முடிவெடுக்கும் தன்மையை இழந்தேன். இதன்பின், என்னை பாலியல் ரீதியாக கையாள துவங்கினார். மாயா தனியாக வசித்ததால், என்னையும் அவருடன் தங்க வைத்தார். ஆரம்பத்தில் என்னை கட்டிப் பிடிக்க துவங்கி, பின் நெற்றியில் முத்தமிட்டு வந்தார். பிறகு எல்லைகள் தகர்ந்தன; என் கழுத்து, கன்னம் என, என்னை மொத்தமாக முத்தமிட துவங்கினார். இதெல்லாம், தோழியருக்கு இடையே சாதாரணம் என்றார்.
அப்போது தான், நான் எங்கோ தவறாக சிக்கிக் கொண்டேன் என்பதை உணர துவங்கினேன். மனநல டாக்டரை அணுகி, தெளிவு பெற்றேன். மாயாவால், பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதை உணர்ந்தேன். பின், அவரது உறவை துண்டித்து, மீண்டும் என் நண்பர்களுடன் இணைந்தேன். இதுவரை, மாயா கூறியது எதுவும் உண்மையில்லை என்பதை, இந்த பதிவால் அறியலாம்.
இவ்வாறு நடிகை அனன்யா கூறியுள்ளார்.
நடிகை மீதே, மற்றொரு நடிகை பாலியல் புகார் கூறியுள்ளது, கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.