தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெண்ணை, கூப்பிடத் தான் செய்வார். இஷ்டம் இருந்தால் போகலாம்; இல்லையென்றால், விட்டு விடலாம் என, நடிகர் மாரிமுத்து பேசிய பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து, இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து, பேட்டி ஒன்றில் கூறியதாவது: பெண்ணை, அறைக்கு வா என, கவிஞர் அழைத்தார். ஆம்பிளை என்பதால், அவர் கூப்பிடத்தான் செய்வார். இஷ்டம் இருந்தால் செல்லலாம். இல்லையென்றால், வேண்டாம் என சொல்லிவிட்டு போக வேண்டியது தான். அவர் ஆம்பளை தானே. அவருக்கும் ஆசை இருக்காதா? மூன்று வாரம் தான், இந்த பிரச்னை பேசப்படும்; அதன்பின், வேறு ஒரு பிரச்னை பேசப்படும். இது தான் நடக்கும். இதனால், வைரமுத்துக்கு இழுக்கு இல்லை. அவர், ஒரு பெண்ணை தானே அழைத்தார். ஆணை அழைத்தால் தானே அசிங்கம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாரிமுத்துவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் அவருக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அசிங்கம் பிடித்தவர்
நடிகர் சித்தார்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : இந்த அசிங்கம் பிடித்தவர், பரியேறும் பெருமாள் படத்தில், கெட்டவனா நல்லா நடிச்சார் என, நினைத்தேன். அவனே தானே நீ...! என, குறிப்பிட்டுள்ளார்.