பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சர்கார் படம் கதை திருட்டில் சிக்கி, கோர்ட் வரை சென்றது. இறுதியில் வழக்கை தொடர்ந்த செங்கோல் கதாசிரியர் வருண் ராஜேந்திரன் உடன் முருகதாஸ் சமரசமாகிவிட்டதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மேலும் வருண் ராஜேந்திரனுக்கு படத்தின் டைட்டில் கார்டில் அங்கீகாரம் அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முருகதாஸ்க்கு சமூக வலைதளங்களில் கண்டங்கள் பெருகி வருகின்றன. இதையடுத்து வதந்தியை நிப்பாட்டுங்கள் என முருகதாஸ் வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் முருகதாஸ்.
வதந்தியை நிறுத்துங்கள்
அதில், "வழக்கம்போல் நிறைய வதந்திகள் இஷ்டத்திற்கும் பரப்பப்பட்டு வருகின்றன. இயக்குநர் பாக்யராஜ் என்னை அழைத்து பேசினார். ஒருவனின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுள்ளனர். இதுதான் படத்தின் கரு. மற்றபடி சர்கார் கதைக்கும், அந்தக்கதைக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நமக்கு முன்னாடி ஒரு உதவி இயக்குநர் அதை பதிவு செய்துள்ளார். அவரைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் படத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு கார்டு போடச் சொன்னார். நானும் சரி என்று ஒத்துக் கொண்டேன். மற்றபடி சர்கார் எனது கதை தான். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே முருகதாஸ் தான். அதில் எந்த மாற்றும் இல்லை. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
Stop the rumours ! pic.twitter.com/9uHY1wRtOk
— A.R.Murugadoss (@ARMurugadoss) October 30, 2018
திறமையுள்ள ஒரு சக உறுப்பினரை திரை உலகுக்கு அடையாளம் காட்டிய நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
pic.twitter.com/nmfVslAttz
— A.R.Murugadoss (@ARMurugadoss) October 30, 2018