'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. அதன்பிறகு சில படங்களில் நடித்தபோதும் அவரால் தமிழில் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் பாலிவுட்டுக்கு சென்று சில படங்களில் கதையின் நாயகியாக நடித்து தனது திறமையை நிரூபித்தார் டாப்சி.
தற்போது, கேம் ஓவர் என்ற தமிழ்ப்படத்தில் நடிக்கும் அவர், இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டகால கனவாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
மணிரத்னம் படங்களின் மேக்கிங், கதாநாயகிகளை அவர் தனது படங்களில் வெளிப்படுத்தும் விதத்தை நான் வித்தியாசமாக உணர்கிறேன். அவர் படத்தில் நடிக்கும்போது தான் நடிகைகள் நடிப்பில் முழுமை பெறுகிறார்கள். அதனால் அவரது படத்தில் நடிக்க வேண்டும். என்னை அனைவரும் மணிரத்னம் படநாயகி என்று பெருமையாக சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் டாப்சி.