தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும், கதைத் திருட்டும் என ஒரு தொடர் எழுதும் அளவிற்கு அவருடைய படங்களில் உள்ள கதைத் திருட்டுகள் அவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கஜினி, கத்தி, சர்கார் என அவருடைய படங்களின் கதைத் திருட்டுகள் பலரும் அறிந்த ஒன்று.
'சர்கார்' படத்தின் கதை தான் எழுதிய 'செங்கோல்' கதை என வருண் ராஜேந்திரன் என்பவர் திரைப்பட எழுத்தாளர் சங்க ஆதரவு கடிதத்துடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த கதைத் திருட்டு விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ், இந்தியாவின் திரைக்கதை மன்னன் என்றழைக்கப்படும் பாக்யராஜ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
ஆனால், திரையுலகத்தில் உள்ள நேர்மையான பலரும், வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஒரு சிலர் மட்டுமே ஏதோ ஒரு ஆதாயத்திற்காக முருகதாஸ் பக்கம் சாய்ந்து சில அரசியல் வேலைகளில் ஈடுபட்டனர். தனக்கு ஆதரவாக இருந்த அவர்கள் மீதும் இப்போது முருகதாஸ் கரியைப் பூசிவிட்டார்.
'சர்கார்' கதைக்காக வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொள்வதாக முருகதாஸ் நீதிமன்றத்தில் அறிவித்துவிட்டார். அதோடு, வருண் ராஜேந்திரன் பெயரும் 'சர்கார்' படத்தில் இடம் பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் 'செங்கோல்' கதைதான் 'சர்கார்' கதை என நிரூபணமாகியுள்ளது. முருகதாஸுக்கு ஆதரவாகப் பேசியவர்கள், எழுதியவர்கள் இப்போது அவர்களது முகத்தை எங்கு வைத்துக் கொள்வார்கள் ?.