ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நிபுணன் படத்தில் நடித்த நடிகை ஸ்ருதி ஹரிகரன், அந்தப்படத்தில் நடித்த நடிகர் அர்ஜூன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இதனை மறுத்த அர்ஜூன், அவர் மீது 5 கோடி நஷ்டஈடு கேட்ட வழக்கு தொடர்ந்தார். ஸ்ருதியும் அர்ஜூன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் அர்ஜூனை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
அர்ஜூன், ஸ்ருதி மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஸ்ருதி ஹரிகரனுக்கு புதிய பட வாய்ப்பு அமைவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னட சினிமாவில் அர்ஜூன், சக்தி மிக்க நடிகர், அவரை மீறி அங்குள்ளவர்கள் படம் எடுக்க முன்வர மாட்டார்கள் என்கிறார்கள். அது மட்டுமல்ல ஸ்ருதி ஒப்பந்தமாகி இருக்கும் படங்களில் இருந்து கூட அவர் நீக்கப்படும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
அதை நிரூபிக்கும் வகையில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் ஒன்றிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தாரி தப்சித்டான் தேவ்ரு என்ற படத்தில் நடிக்க 3 மாதங்களுக்கு முன்பு ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அடுத்தமாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில் ஸ்ருதி படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்
இதுகுறித்து படத்தின் இயக்குனர் லிங்கதேவ்ரு கூறும்போது, "ஸ்ருதி, அர்ஜூன் மீது புகார் அளித்துள்ளார். அர்ஜுன், ஸ்ருதி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் ஸ்ருதி அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுக்கு செல்ல வேண்டியது வரும். அவரது கவனம் சிதையும் அதனால் அவரால் முழு ஈடுபாட்டுடன் நடிக்க முடியாது. அதனால், அவர் நீக்கப்பட்டிருக்கிறார். விரைவில் புதிய நாயகியுடன் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கும்" என்றார்.