தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
செல்பி எடுத்த வாலிபரின் மொபைலை தட்டிவிட்ட விவகாரத்தில் நடிகர் சிவகுமார் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
மதுரையில் நடந்த, தனியார் நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் சிவகுமார் பங்கேற்றார். அப்போது, வாலிபர் ஒருவர், மொபைல் போனில் செல்பி எடுத்தார். இதனால், கோபமடைந்த சிவகுமார், அவரது மொபைல் போனை, கீழே தள்ளி விட்டார். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது, சிவகுமாருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதுப்பற்றி விளக்கம் அளித்த சிவகுமார், சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி, செல்பி எடுப்பது நியாயமா? நானும் மனிதன் தான். எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை தலைவனாக ஏற்க வேண்டாம். ஒவ்வொருவரும், அவரவர் வாழ்க்கையில் ஹீரோ தான். மற்றவர்களை நாம் எந்தளவு துன்புறுத்துகிறோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் சிவகுமார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆர்வமிக்க ரசிகர்கள், கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படி தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். அதை திரைப்பட கலைஞன் பொறுத்து கொள்ள தான் வேண்டும். சிவகுமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில் எனது செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.