ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
செல்பி எடுத்த வாலிபரின் மொபைலை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார், நான் புத்தன் இல்லை; நானும் மனிதன் தான் என, கூறியுள்ளார். மதுரையில், நேற்று முன்தினம் நடந்த, தனியார் நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் சிவகுமார் பங்கேற்றார். அப்போது, வாலிபர் ஒருவர், மொபைல் போனில் செல்பி எடுத்தார். இதனால், கோபமடைந்த சிவகுமார், அவரது மொபைல் போனை, கீழே தள்ளி விட்டார். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது; விமர்சனத்திற்கும் உள்ளானது.
இதுகுறித்து, சிவகுமார் அளித்த பேட்டி: தனிப்பட்ட முறையில், செல்பி எடுப்பது, அவர் குடும்ப விஷயம்; அதைப்பற்றி, நான் ஏதும் கூற விரும்பவில்லை. ஆனால், ஒரு பொது இடத்தில், 300 பேர் பங்கேற்கும் விழாவில், சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி, செல்பி எடுப்பது நியாயமா? விமான நிலையம் மற்றும் திருமண விழாக்களில், பல ஆயிரம் பேருடன், மொபைல் போனில் படம் எடுக்க, போஸ் கொடுத்துள்ளேன். நான் புத்தன் இல்லை; நானும் மனிதன் தான். எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை தலைவனாக ஏற்க வேண்டாம். ஒவ்வொருவரும், அவரவர் வாழ்க்கையில் ஹீரோ தான். மற்றவர்களை நாம் எந்தளவு துன்புறுத்துகிறோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.