இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அழகும், திறமையும் இருந்தும் ஒரே ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார் சுவாசிகா. 9 வருடங்களுக்கு முன்பு வைகை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சுவாசிகா. அதன் பிறகு கோரிப்பாளையம், மைதானம், கண்டதும் காணாததும், சோக்காளி உள்பட பல படங்களில் நடித்தார், தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். தமிழில் அவர் சமுத்திரகனி ஜோடியாக நடித்த சாட்டை படம் மட்டுமே தமிழில் அவர் சந்தித்த ஒரே ஒரு வெற்றிப் படம். அதற்கு பிறகும்கூட அவருக்கு சரியான வாய்ப்பு இல்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது எவனும் புத்தனில்லை படத்தில் நடித்துள்ளார். வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தில் நபிநந்தி, சரத் என்ற புதுமுகங்கள் அறிமுகமாகிறர்கள். சுவாசிகாவுடன் நிகாரிகாவும் இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். மரியா மனோகர் இசை அமைத்துள்ளார், ராஜா சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், எஸ்.விஜயசேகரன் இயக்கி உள்ளார்.
"இதன் படப்பிடிப்புகள் சென்னை, மூனார், மலேசியாவில் நடந்துள்ளது. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு ஜனரஞ்சகமான படமாக உருவாகி உள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப் பட்டுள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக மலை வாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம். சுவாசிகாவுக்கு திருப்பம் தருகிற படமாக இது இருக்கும். என்கிறார் இயக்குனர் விஜயசேகரன்.