டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எனக்கான ஒரு அடையாளம் வேண்டும் என்பதால்தான், கொஞ்சம் ரிஸ்க்கான சப்ஜெக்ட்டுகளை படமாக எடுத்து வருகிறேன் என்று ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் கூறியுள்ளார். 15-ம் நூற்றாண்டு கதையான "உருமி" என்ற படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்படப் போகிறார் சந்தோஷ் சிவன். தற்போது விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் அளித்த பேட்டி இதோ...
* உங்களைப் பற்றி?
என்னைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதை நான் தன்னடக்கமாகவும் பேசவில்லை,கர்வமாகவும் நினைக்கவில்லை. திருவனந்தபுரத்தில் பிறந்தேன். சினிமா மீது கொண்ட ஆசையில் கேமராமேனாகினேன். ஏறக்குறைய எல்லா மொழி சினிமாவிலும் பணியாற்றி விட்டேன்.
* ‘உருமி’யை பற்றி சொல்லுங்கள்!
வரலாற்று சம்பவங்களை ஆராய்வதிலும், அதைப் பற்றி தெரிந்து கொள்வதிலும் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. நான் ‘கோவா’ போன்ற நகரங்களுக்கு லொக்கேஷன் பார்க்க செல்லும் போது, அங்குள்ள பழமையான கட்டிடங்களையும், சில பழமையான விஷயங்களையும் கண்டு ஆச்சரியப்படுவேன். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரமும், நாகரீகமும் தலைகீழாக இப்போது மாறிவிட்டன. ஆனால் அந்த வரலாற்று சம்பவங்கள் பல செய்திகளை நமக்கு கட்டிடங்கள், கல்வெட்டுக்களின் வழியே சொல்லிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ‘வாஸ்கோடகாமா’ இந்தியாவிற்குள் வந்த போதும்,அதற்கு முந்தைய காலகட்டத்திற்கு செல்லும் கதையை தேடியபோதும் கிடைத்ததுதான் ‘உருமி’.
* இதுபோன்ற வரலாற்று பின்னணி படம் எடுப்பது ரிஸ்க்கு தானே?
கேமராமேனாக பணியாற்ற படங்கள் வந்து கொண்டிருக்கும் போது, அதில் ஒர்க் பண்ணிவிட்டு நல்ல சம்பளம் வாங்கி செட்டிலாகி விடுங்கள் என்று என்னிடம் சில பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. எனக்கான ஒரு அடையாளம் வேண்டும் என்பதால்தான், கொஞ்சம் ரிஸ்க்கான சப்ஜெக்ட்டுகளை படமாக எடுத்து வருகிறேன். உருமி’யில் பிரபுதேவா, பிருத்விராஜ், ஆர்யா,ஜெனிலியா, நித்யா மேனன், வித்யா பாலன் என்று அனைவரும் அசத்தியிருப்பார்கள். உண்மையிலேயே என்னை மிரள வைத்தவர் ஜெனிலியாதான். இரண்டே வாரத்தில் குதிரை பயிற்சி எல்லாம் கற்றுக் கொண்டு வந்தார். ‘உருமி’யில் ஒவ்வொருவரும் ஆத்மார்த்தமாக பணியாற்றியுள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.