சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியின் மகன் ஏ.எச்.காஷிஃப். ஏ.ஆர்.ரகுமானின் இசை பள்ளியில் படித்து அவரது இசைக்குழுவில் பணியாற்றிய இவர் இப்போது ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
காற்றின் மொழி படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். சிறு வயதிலேயே இசை பயில ஆரம்பித்தேன். எனது மாமாவிடமும் இசை கற்றேன். பல படங்களில் அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் பாடல்களை உருவாக்கி யூ டியூப்பில் பதிவேற்றினேன். அப்போதுதான் தயாரிப்பாளர் தனஞ்செயன் சினிமாவில் இசையமைக்க ஆர்வம் இருக்கிறதா? என்று கேட்டார். அப்படிதான் இந்த பயணம் தொடங்கியது.
ஹிந்தியில் வெளியான 'துமாரி சுலு' தான் 'காற்றின் மொழி'. அந்தப் படத்தின் பாடல்களை ஒரு முறை தான் கேட்டேன். ஆனால், அதன்பிறகு பெரிதாக அதைப்பற்றி சிந்திக்கவில்லை. இசையமைக்க ஆரம்பித்துவிட்டேன். பின்னணி இசையைப் பொறுத்தவரையில் படத்தின் முதல்பாதி மிகவும் சுலபமாக முடிந்துவிட்டது. இரண்டாம் பாதியில் பல காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால், தரமான இசையைத் தரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். ஆகையால், அதன் பணி நடந்து வருகிறது.
பாடல்களை இசையமைத்து முடித்ததும் முதலில் எனது பாட்டியிடம் கொடுத்தேன், அடுத்து மாமாவிடம்தான் கொடுத்தேன். மாமா என்ற உறவைத் தாண்டி அவர் பள்ளியில் பயின்றதால் அவர் எனக்கு குரு. அப்படிச் சொல்வதில்தான் எனக்கு பெருமை. இதன்பிறகு மலையாளத்தில் அகஸ் சினிமாஸ் தயாரிப்பில் 'பதினெட்டாம் படி' என்ற படத்தில் இசையமைக்கவிருக்கிறேன். என்கிறார் காஷிஃப்.