ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்&மீனாட்சி தம்பதிகள் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று பல வருடங்களாக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தனுஷ் மீது இவர்கள் தொடர்ந்த வழக்கை தகுந்த முகாந்திரம் இல்லை என்று கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் இந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்று, இருப்பிட சான்று, பள்ளிச் சான்று போன்றவை போலியானவை என்று தொடர்ந்து மேலூர் தம்பதிகள் புகார் கூறி வந்தனர்.
இந்த நிலையில் கதிரேசன் தம்பதிகள் மதுரை 6வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிலர் "தங்கள் வழக்கில் தனுஷ் தாக்கல் செய்த சான்றுகள் அனைத்தும் போலியானவை, இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்பதோடு மிகப்பெரிய மோசடியுமாகும். இதுகுறித்து கடந்த ஒரு வருடமாக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்ய போலீசுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளனர். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.