நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
வெண்ணிலா கபடிக் குழு 2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பிஸியாக நடித்து வரகிறார் நடிகர் விக்ராந்த். அடுத்தப்படியாக இவரது சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. இந்தப்படத்திற்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார் விஜய் சேதுபதி.
இதுப்பற்றி சஞ்ஜீவ் கூறுகையில், 2015-ல் விக்ராந்த்தை வைத்து 'தாக்க தாக்க' படத்தை இயக்கினேன். இதையடுத்து விஜய் சேதுபதியிடம் ஒர கதையை சொன்னேன். இதை கேட்டதும், நன்றாக இருக்கிறது, விக்ராந்திற்கு பொருத்தமாக இருக்கும். இந்தப்படத்திற்கு நான் வசனம் எழுதவா...? என கேட்டார். அவர் படப்பிடிப்பை முடித்துவிட்டு இரவு நேரங்களில் என்னுடன் கதை விவாதத்தில் பங்கு கொண்டு, திரைக்கதையை மெருகேற்றியதுடன், வசனத்தையும் அவரே எழுதினார். ஏற்கனவே அவர் தயாரித்து, நடித்த 'ஆரஞ்சு மிட்டாய் ' என்ற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். விக்ராந்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்திருக்கும் இந்த உதவிக்கு நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் இருப்போம் என்றார்.