ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் சர்கார் படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் அளித்திருந்தார். அந்த புகாருக்கு சங்கத்தின் தலைவர் பாக்யராஜ், பொதுச் செயலாளர் மனோஜ்குமார் ஆகியோர் பதிலளித்த கடிதத்தின் கடைசி பக்கம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதன்படி, வருண் ராஜேந்திரன் மேற்படி சங்கத்தில் பதிவு செய்த செங்கோல் கதையும், சர்கார் படத்தின் கதையும் ஒன்று என சங்கத்தினர் முடிவு தெரிவித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
தனது அப்பாவிடம் அண்ணாமலை பட வசனத்தைப் பேசி நடித்துக் காட்டி சினிமாவில் நடிகராக வேண்டும் என வந்தவர் தான் விஜய். திரைப்படங்களில் அந்தக் காலத்திலிருந்தே நல்லவராக இருக்கும் நாயகனுக்கும், கெட்டவராக இருக்கும் வில்லனுக்கும் நடக்கும் போராட்டம் தான் பெரும்பாலான படங்களின் கதையாக இருக்கும்.
விஜய் நடித்துள்ள பல படங்களின் கதையும் அப்படிப்பட்ட கதை தான். ஏன், சர்கார் படத்தின் கதை கூட கெட்டது செய்யும் அரசியல்வாதிகளை எதிர்த்து நல்லது செய்யப் புறப்படும் நாயகனின் கதைதான் என்கிறார்கள்.
இந்தியத் திரையுலகத்தில் திரைக்கதையின் ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் பாக்யராஜ். அவர் தலைமை ஏற்றிருக்கும் ஒரு சங்கத்தின் மூலமாக சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்று என சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு உதவி இயக்குனர் பல ஆண்டு காலமாக தன் மனதில் தேக்கி வைத்திருந்த விஷயங்களை ஒரு கதையாக உருவாக்கி, அதை முதல் படமாகக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் வருண் ராஜேந்திரன்.
உதவி இயக்குனர்களின் கஷ்டம் என்ன என்பது விஜய்க்கு தெரியும். பாக்யராஜ் எப்படிப்பட்ட திறமைசாலி என்பதும் விஜய்க்கு தெரியும். உதவி இயக்குனர்கள் மீதும், பாக்யராஜ் மீதும் மதிப்பு இருந்தால் சர்கார் படத்தின் நாயகன் விஜய் இந்தக் கதைத் திருட்டு விவகாரத்தில் தலையிட வேண்டும் என திரையுலகத்தில் உள்ள பலர் விரும்புகிறார்கள்.
வருண் ராஜேந்திரன், சர்கார் பட டைட்டிலில் கதை என அவருடைய பெயர் இடம் பெற வேண்டும் என்று வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது என்கிறார்கள்.
ஏற்கெனவே ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படக் கதை விவகாரத்திலும், கஜினி படக் கதை விவகாரத்திலும் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியவர்தான். அதனால், சர்கார் கதையும் அதே போல நடந்திருக்க வாய்ப்புண்டு என்றே திரையுலகத்தில் பலரும் நினைக்கிறார்கள்.
உசுப்பேத்றவன் கிட்ட உம்முனும் கடுப்பேத்றவன்கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என சர்கார் இசை வெளியீட்டு விழாவில் டயலாக் பேசிய விஜய், இந்த விவகாரத்தில் கம்முனு இருந்து அவருடைய வாழ்க்கையை ஜம்முனு அமைத்துக் கொள்ளப் போகிறாரா அல்லது தப்பைத் தட்டிக் கேட்பவன் தான் நாயகன் என்ற பார்முலா படி இந்தக் கதைத் திருட்டு விவகாரத்தில் தலையிட்டு வருண் ராஜேந்திரன் வாழ்க்கையை ஜம்முனு அமைத்துக் கொடுக்கப் போகிறாரா என தமிழ் சினிமாவில் உள்ள பல உதவி இயக்குனர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.