ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில், குழந்தைகளுக்கான அமைதி நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதுப்பற்றி செய்தியாளர்களிடம் லதா பேசியதாவது :
சென்னை, திருவான்மியூரில் நவ., 2 முதல் 4-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. 1500 குழந்தைகள் பங்கேற்க உள்ளனர். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
அனைத்து குக்கிராமங்களிலும் தயா அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளை வைத்து பிழைக்கும் அளவுக்கு இந்த சமூகம் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தை கடத்தலை தடுக்க ஒவ்வொரு ஊரிலும் முகாம்கள் அமைக்கப்படும்.
மீ டூ விவகாரத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். இதில் நான் தலையிட கூடாது. எந்த துறையிலும் கெடுதல் நடக்க கூடாது என விரும்புகிறேன் என்றார்.