தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சந்தூ மொன்டெட்டி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில், நாகசைதன்யா, மாதவன், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சவ்யசாச்சி'. இப்படம் நவம்பர் 2ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலரைப் பார்த்ததும் தமிழ் ரசிகர்கள் இந்தப் படம் 2017ம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'பீச்சாங்கை' என்ற படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டிருக்கிறது என கூறி வருகிறார்கள்.
படத்தில் நாயகனின் இடது கை அவன் மூளை சொல்வதைக் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்படும். அதனால், ஏற்படும் பிரச்சினைகள் தான் 'பீச்சாங்கை' படத்தின் கதை. 'சவ்யசாச்சி' படத்திலும் நாயகன் நாக சைதன்யாவுக்கு அதே போன்றதொரு பிரச்சினை இருக்கிறது. ஆனால், இந்தப் படம் 'வானிஷிங் டிவின் சின்ட்ரோம்' என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
படத்தின் டீசரில் 'ஒரே அம்மாவுக்குப் பிறந்தவர்கள் அண்ணன், தம்பிகள் ஆவார்கள். அதே சமயம் இருவர் ஒரே உடல், ரத்தம் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு பிறந்தால், அது ஒரு அற்புதம். முகம் தெரியாத அந்த சகோதரனுடன், அந்த அற்புதத்தை நான் ஆரம்பிக்கிறேன்,' என சொல்லியிருக்கிறார்கள்.
இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பது தெரிகிறது. ஆனாலும், 'பீச்சாங்கை' பட கதாநாயகனின் கதாபாத்திரத் தன்மையை இந்தப் படத்தில் எப்படி காப்பியடித்திருக்கிறார்கள் என்பது படத்தைப் பார்த்த பிறகுதான் தெரியும்.