டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நகைச்சுவை நடிகராக கோலோச்சிக் கொண்டிருந்த சந்தானத்திற்கு தனக்குப் பின் விஜய் டிவிக்கு வந்த சிவகார்த்திகேயன், சினிமாவில் ஹீரோவாக ஜெயித்ததை பார்த்துவிட்டு, தானும் ஹீரோவாக நடிப்பேன் என்று அடம் பிடித்தார். ஆனால், அவர் நாயகனாக நடித்த சில படங்களே தற்போது நின்று போய்விட்டன.
எப்போதே வெளிவர வேண்டிய 'சர்வர் சுந்தரம்' பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் வெளியாகவில்லை. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' பட இயக்குனர் மணிகண்டன் இயக்கிய 'ஓடி ஓடி உழைக்கணும்', ஒரு கட்டத்தில் ஓடாமல் நின்றுவிட்டது. செல்வராகவன் இயக்கத்தில் ஆரம்பமான 'மன்னவன் வந்தானடி' அப்படியே தடுமாறி நிற்கிறது. செல்வராகவன், சூர்யா நடிக்கும் 'என்ஜிகே' படத்தை இயக்கப் போய்விட்டார். இந்தப் படங்கள் தன்னை மீட்டெடுக்காது என்று நினைத்த சந்தானம் 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போய்விட்டார். நேற்று அப்படத்தின் முதல் பார்வையும் வெளியானது.
அதோடு, நேற்று அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றையும் ஆரம்பித்துவிட்டார். நடித்து நின்று போயிருக்கும் படங்களுக்கு முன்பாக 'தில்லுக்கு துட்டு 2' படத்தை வெளியிடும் முயற்சியில் சந்தானம் இருக்கிறாராம். முதல் பாகத்தைப் போலவே இந்தப் படம் 'துட்டு' வசூல் செய்து தன்னைக் காப்பாற்றும் என நினைக்கிறாராம்.