ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் சர்கார். முருகதாஸ் இயக்கி உள்ள இப்படம் அரசியல் படமாக உருவாகி இருக்கிறது. சர்கார் படத்தின் கதை என்னுடையது என வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், நான் எழுதிய செங்கோல் படக்கதையை தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன். அந்தக்கதையை திருடி தான் முருகதாஸ் சர்கார் படத்தை இயக்கி உள்ளார். இதுதொடர்பாக எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளேன். அவர்களும் இது என்னுடைய கதை தான் என உறுதி செய்திருக்கிறார்கள்.
ஆகவே எனக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். படத்தின் தலைப்பில் என்னுடைய கதை என இடம் பெற செய்ய வேண்டும், அதுவரை படத்தை திரையிட கூடாது, இதை அவசர வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் முருகதாஸ், படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் எழுத்தாளர்கள் சங்கம் ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி, வழக்கை அக்., 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை சர்கார் படத்திற்கு தடை விதிக்க முடியாது என கூறினார்.
இதனிடையே சர்கார் படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்று கிடைத்த நிலையில் படத்தை நவ., 6-ம் தேதி, தீபாவளி தினத்தில் வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.