'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து, அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன் ரிலீசுக்கு தயாராகி விட்டது. தற்போது அவர் ராஜபாண்டி இயக்கும் கள்ளப்பார்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விரைவில் தான் படம் இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் அரவிந்த்சாமி. அதனால் தற்போது தன்னிடம் உள்ள கதையை சில நடிகர்களிடம் சொல்லி வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் கள்ளபார்ட் படப்பிடிப்பு நடந்தபோது, அரவிந்த்சாமியை சந்தித்து கதை கேட்டுள்ளார் விஜய்சேதுபதி.
இரண்டு மணி நேரம் கேரவனுக்குள் அமர்ந்து விஜய் சேதுபதியிடம் கதை சொல்லியிருக்கிறார் அரவிந்த்சாமி. இதேப்போல் இன்னும் சில நடிகர்களிடமும் அவர் கதை சொல்லியிருக்கிறார். ஆக, கள்ளபார்ட் படத்தில் நடித்து முடித்ததும் தான் இயக்கும் படம் குறித்து தகவலை அரவிந்த்சாமி வெளியிடுவார் என்று தெரிகிறது.