ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது பெண்கள் மீ டூ மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி வெளியிட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர்கள் அர்ஜுன், தியாகராஜன், ராதாரவி, இயக்குனர் சுசி கணேசன் ஆகியோர் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு கூறும் பெண்களுக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ், சித்தார்த் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களே இருக்கிறார்கள்.
பிரகாஷ்ராஜ், ஸ்ருதி ஹரிகரன் புகாரின் பேரில் நடிகர் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சில திரைபிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து பிரகாஷ்ராஜ் தனது பேஸ்புக்கில் தெரிவித்திருப்பதாவது:
திரைப்படத்துறையில் பல பெண்களுக்கு பாலியல் ரீதியான அநீதி இழைக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து அவர்கள் புகார் எழுப்பினால் அவர்களை நோக்கியே அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். குற்றம்சாட்டும் பெண்களின் வாயை அடைக்கும் வகையில் பேசுகிறார்கள். யாருடைய தூண்டுதலின் பேரில் புகார் செய்கிறாய். அரசியல் பின்னணி உள்ளதா? என்று கேள்வி கேட்கிறார்கள். இது அவர்கள் மேற்கொண்டு பேசாமல் வாயை அடைக்கும் முயற்சி.
அர்ஜுன் மீது ஸ்ருதிஹரிகரன் புகார் அளித்துள்ளார். அனைவரும் ஸ்ருதிக்கு எதிரான கருத்துக்களைத்தான் சொல்கிறார்கள். நான்தான் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றேன். இது குறித்து முறையான விசாரணை வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் எழுதியுள்ளார்.