டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குநர் சுசி கணேசன் மீது பெண் இயக்குனர் லீனா மணிமேகலை பாலியல் புகார் கூறினார். இதை மறுத்த சுசி.கணேசன் லீனா மணிமேகலை மீது ஒரு ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் சுசி கணேசன் கடைசியாக இயக்கிய திருட்டுப்பயலே 2ம் பாகத்தில் நடித்த நடிகை அமலாபால், அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது டபுள் மீனிங்கில் பேசியும், உடலை ஒட்டி உரசியும் பாலியல் தொல்லை தந்ததாக அமலாபால் குற்றம்சாட்டினார்.
இந்த செய்தி வெளியானதும் சுசி கணேசனும், அவரது மனைவி மஞ்சரியும் தொலைபேசியில் மிரட்டியதாக அமலாபால் கூறியுள்ளார். இதுகுறித்து அமலாபால் டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது :
இப்போதுதான் என் வாழ்வில் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்தேன். இயக்குனர் சுசி கணேசனும், அவரது மனைவி மஞ்சரியும் என்னை தொலைபேசியில் அழைத்தனர். அவர்களுக்கு உரிய விளக்கம் தரலாம் என்று நினைத்து அந்த அழைப்பை எடுத்து பேசினேன். சுசி கணேசன் மனைவியை நான் சமாதானப்படுத்த முயற்சித்தேன். ஆனால் சுசி கணேசன் என்னை ஆபாசமாக திட்ட ஆரம்பித்தார். அதை கேட்டு அவரது மனைவி சிரித்தார். இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பின்னர் இருவரும் சேர்ந்து என்னை ஆபாசமாக திட்டினர். இதுபோன்ற தந்திரங்களால் என்னை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். என்று எழுதியிருக்கிறார் அமலாபால்.