பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வெங்கட்பிரபுவின் குழுவில் நடிகர்களில் நிதின் சத்யாவும் ஒருவர். அவர் இயக்கிய அனைத்து படங்களிலுமே இவரும் நடித்திருக்கிறார். தவிர அரண்மனை, திருடன் போலீஸ், பண்டிகை என பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்துள்ளார்.
இந்தநிலையில், தற்போது ஜருகண்டி என்ற படத்தை முதன் முறையாக தயாரித்துள்ளார் நிதின் சத்யா. வெங்கட்பிரபுவின் உதவியாளர் பிச்சுமணி இயக்கியுள்ள இந்த படத்தில், ஜெய், ரெபா மோனிகா, டேனியேல், போஸ் வெங்கட், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 26-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. வழக்கம்போல் பட நாயகன் ஜெய் கலந்து கொள்ளவில்லை. படத்தின் மற்ற கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். நிதின் சத்யா பேசும்போது, இந்த ஜருகண்டி ஒரு சின்ன படம் என்றாலும் நல்ல படம். பிச்சுமணி, வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். நல்ல திறமையான இயக்குனர் என்பதால் அவரை இந்த படத்தை இயக்க ஒப்பந்தம் செய்தேன்.
மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் பணியாற்றியபோது ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் அவருக்கு நண்பராகி விட்டார். அதனால் அவரை இந்த படத்திற்கு அழைத்து வந்தார். பெரிய ஒளிப்பதிவாளர் என்றபோதும் எங்களது நட்புக்காக இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார். அவர் படத்தையே பிரமாண்டமாக்கி விட்டார்.
நான் சிறு வயதில இருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன். அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது தான் தயாரிப்பாளராக முடிவெடுத்தேன். இந்தப்படம் வெற்றி பெற்று என்னை அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க வைக்கும் என்று நம்புகிறேன். அதோடு, நான் தயாரிப்பாளராகி விட்டபோதும் எப்போதும் போலவே படங்களில் நடிப்பதை தொடருவேன் என்கிறார் நிதின்சத்யா.