ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மும்பையில் கலா சம்ருதி சர்வதே குறும்பட போட்டிகள் நடந்தன. பெல்ஜியம், மெக்ஸிகோ உள்ளிட்ட 30 நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட குறும்படங்கள் போட்டியிட்டன. இதில், நித்திய சுமங்கலி என்ற குறும்படத்தை இயக்கிய பெண் இயக்குனர் லஷ்மி பூஜா, சிறந்த பெண் இயக்குனருக்கான பிரிவில் 2வது பரிசை பெற்றுள்ளார். மன்னர் காலத்தில் வாழ்ந்த தேவதாசிகள் பற்றிய குறும்படம் இது. ஜான்வி என்பவர் தேவதாசியாக நடித்திருந்தார்.
லஷ்மி பூஜாவின் பூர்வீகம் தமிழகம் என்றாலும் தற்போது வசிப்பது பெங்களூருவில். திரைத்துறையில் ஆர்வம் கொண்டுள்ள இவர், நயன்தாராவுக்காக தாய்பாலை மையமாக கொண்ட கதை ஒன்றை உருவாக்கியுள்ளார். அதை படமாக்கும் முயற்சியிலும் லஷ்மி பூஜா ஈடுபட்டுள்ளார். இவரது தாத்தா உபேந்திரகுமார், பிரபல கன்னட இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.