ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளர் இளையராஜா, வியந்து பார்த்த இசையமைப்பாளர்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் முக்கியமானவர். அவருடைய இசையைக் கேட்டுதான் தானும் இசையமைக்க வந்தேன் என ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். இதுவரை வேறு எந்த இசையமைப்பாளர்களுடனும் இணைந்து இளையராஜா இசையமைத்ததேயில்லை, எம்எஸ்வியைத் தவிர.
இருவரும் இணைந்து “மெல்லத் திறந்தது கதவு, இரும்புப்பூக்கள், செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன், என் இனிய பொன்நிலாவே, விஷ்வ துளசி” ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்.
இப்போது எம்எஸ்விக்கு அடுத்து தன் இளைய மகன் யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைக்க சம்மதித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே இந்தப் படம் பற்றிய பேச்சு இருந்து வந்தது. ஆனால், நேற்றுதான் படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
யுவன் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா - யுவன்ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து இசையமைக்கிறார்கள். இருவரது ரசிகர்களுக்கும் இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.