ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் ராமகிருஷ்ணா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ரீதேவிகா. அதன்பிறகு, அந்த நாள் ஞாபகம், அன்பே வா, ஞாபகங்கள் படங்களில் நடித்தார். ஏராளமான கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு ரோகித் ராமச்சந்திரன் என்ற விமான பைலட்டை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை தொடர்பாக பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது:
கடந்த 2006-ல் ஒரு படத்தில் நடித்தபோது நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் எனது அறை கதவை யாரோ தட்டினர். நான் திறக்கவில்லை. தொடர்ந்து 2, 3 நாட்கள் இதுபோல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. ஓட்டல் நிர்வாகத்தினரிடம் கண்காணிக்க செய்து படத்தின் டைரக்டர் தான் அப்படி செய்தார் என்பதை கண்டுபிடித்தேன். இதுகுறித்து படத்தின் கதாநாயகனிடம் சொன்னதால் இயக்குனர் என்னிடம் கடுமையாக நடந்தார். எனது காட்சிகளை குறைத்தார். பேசிய சம்பளமும் தரவில்லை.
இதுகுறித்து மலையாள நடிகர் சங்கத்தில் புகார் செய்தும் பலன் இல்லை. அப்போது நடிகர் சங்க செயலாளராக இருந்தவர் இதை பெரிது படுத்தாதே உன் சினிமா வாழ்க்கை நாசமாகி விடும் என்றார். இப்போது மீண்டும் கடிதம் அனுப்பியும் எந்த புகாரும் வரவில்லை என்கிறார்கள்.
இவ்வாறு ஸ்ரீதேவிகா எழுதியுள்ளார்.
ஸ்ரீதேவிகா 2006-ம் ஆண்டில் ராஜபாபு என்ற என்ற தெலுங்கு படத்திலும், மை ஆட்டோகிராப், நீலகண்டா என்ற இரு கன்னடப் படத்திலும் நடித்துள்ளார்.