இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மம்முட்டி தற்போது மலையாளத்தில் 'மதுரராஜா' மற்றும் தெலுங்கில் 'யாத்ரா' என இரு படங்களில் மாறிமாறி நடித்து வருகிறார். தற்சமயம் ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் யாத்ரா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்தநிலையில் 'புலி முருகன்' படத்தை தொடர்ந்து 'மதுரராஜா' படத்தை இயக்கிவரும் இயக்குனர் வைசாக், 'யாத்ரா' படப்பிடிப்பு தளத்திற்கே சென்று மம்முட்டியை சந்தித்து பேசியுள்ளார்.
மதுரராஜா படத்தின் சில காட்சிகள் பற்றிய டிஸ்கஷனுக்காக, 'யாத்ரா' படப்பிடிப்பு தளத்திற்கே நேரில் தான் வந்ததாக கூறியுள்ள இயக்குனர் வைசாக், யாத்ரா படப்பிடிப்பை, அதில் பங்கேற்ற பிரமாண்டமான கூட்டத்தை பார்த்து மிரண்டு போனதாகவும் கூறியுள்ளார். கிட்டத்தட்ட 8000 பேர் வரை கலந்துகொண்ட இந்த கூட்டத்துடன் செல்பி எடுக்க முயன்ற வைசாக், அவ்வளவு பெரிய கூட்டத்தை தன்னுடைய பிரேமுக்குள் அடக்க முடியவில்லை என பிரமித்துள்ளார்.