ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில், மீ டூ விவகாரம், சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கவிஞர் வைரமுத்து, நடிகர் அர்ஜுனை தொடர்ந்து, நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தியாக ராஜன் மீது, பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் பாலியல் புகார் கூறி உள்ளார். தியாகராஜனின் மகனும், நடிகருமான பிரசாந்த் நடித்த, பொன்னர் சங்கர் படத்தில், தனக்கு ஏற்பட்ட அத்துமீறல் குறித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த புகாரை மறுத்திருந்த தியாகராஜன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொன்னர் சங்கர் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை திரையிட்டு காட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இங்கே பொன்னர் சங்கர் காட்சியை உங்களுக்கு போட்டு காட்டினேன். இதில் அத்தனை பேர் உயிரை கொடுத்து உழைத்துள்ளனர். மருத்துவர்கள் உட்பட அத்தனை பேர் செட்ல இரவு பகலா உழைத்தனர். படத்தில் இரண்டு மிஸ் இந்தியா பெண்கள் நடித்தனர். எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை.
என் மீது புகைப்பட கலைஞர் வீணாக பழி சுமத்தி உள்ளார். பேஸ்புக்கில் அவர் எழுதியதை உண்மை என்று எமுதினர். எழுதியவர் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அந்த பெண் இரண்டு நாட்கள் மட்டுமே எங்களோடு டிரைனியாக வந்து வேலை பார்த்தார்.
இனி பேஸ் புக் போன்ற சமூக வலைதளத்தில் வரும் செய்திகளை வைத்து கொண்டு சம்பந்தபட்டவர்களை கலந்து பேசாமல் செய்தியாக்காதீர்கள். எல்லாருக்கும் குடும்பம் குழந்தைகள் உள்ளனர்.
நான் அந்தபெண்ணை தேடிக்கொண்டிருக்கேன்.. விரைவில் அவர் மீது வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. மீ டு பெண்களுக்கு நல்ல முயற்சி.. ஆனால் அதை தவறாக பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
ராதாரவி பேசும் போது, " மீ டூ இயக்கம் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக கருப்பினப்பெண் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அது தொடர்ந்த நிலையில். நம்மூரில் குறிப்பாக திரைத்துறை சார்ந்தவர்களின் மீது அதிகமாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் நோக்கம் தெரியாமல்.
நான் நடிகர் சங்க பதவியில் இருந்தபோதே பெண்களைப் பாதுகாக்க, வாசுகி கமிஷனில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டார்.
திரைத்துறையினர் மீது குற்றச்சாட்டு எழும் போது, ஒரு சார்பாக நடந்துகொள்ளவேண்டாம். இருதரப்பிலும் விசாரித்து செய்தியாக வெளியிடுங்கள்.
சின்மயியை யாரோ ஏவுகிறார்கள், அந்தப்பெண் பாவம்.
இந்த விஷயத்தில் ஒத்துப்போவதும் குற்றமே. சொல்லவே கஷ்டமாக இருக்கிறது. ஆடத்தெரியுமா பாடத்தெரியுமா என்று கேட்பது மாதிரி இனி நீ வெர்ஜினா என்றும் கேட்கவேண்டியிருக்குமோ...
இந்த நிலை நீடித்தால் சினிமா மறுபடியும் நாடக காலத்திற்குச் சென்றுவிடும். ஆண்களே பெண்வேடம் போடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
தியாகராஜன், அர்ஜுன் ஆகியோர் பல ஆண்டுகாலமாகத் திரையுலகில் இருக்கிறார்கள். இதுபோன்ற செய்திகளால் அவர்களது புகழுக்குக் களங்கம்.ஏற்படுவதுடன் அவர்கள் குடும்பத்தாரின் மனங்களும் புண்படும் என்றார்.