‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தெலுங்குத் திரையுலகத்தில் எந்த அளவிற்கு வாரிசு நடிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு வாரிசு மோதல்களும் இருக்கிறது. என்டிஆரின் மூத்த மகனான ஹரிகிருஷ்ணாவின் இரண்டாவது மனைவியின் மகனான ஜுனியர் என்டிஆர், தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். ஜுனியர் என்டிஆருக்கும் அவருடைய சித்தப்பா பாலகிருஷ்ணாவுக்கும் பல வருடங்களாகவே பேச்சு வார்த்தை இல்லை.
சமீபத்தில் ஜுனியர் என்டிஆரின் அப்பா ஹரிகிருஷ்ணா விபத்தொன்றில் உயிரிழந்தார். அதையடுத்து பாலகிருஷ்ணா, ஜுனியர் என்டிஆர் இடையிலான பகை மறைந்துவிட்டது.
நேற்று ஜுனியர் என்டிஆர் நடித்த 'அரவிந்த சமேதா' படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா, 'என்னைப் போலவும், ஜுனியர் என்டிஆரைப் போலவும் வேறு யாராலும் நடிக்க முடியாது. எங்களிடமிருந்து வாழ்க்கையிலிருப்பதை விட பிரம்மாண்டமான படங்களையும், கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்,” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஜுனியர் என்டிஆர், “நாங்கள் எங்களது அப்பாவை இழந்துவிட்டோம். ஆனால், சித்தப்பா பாலகிருஷ்ணா எங்களது அப்பாவைப் போல பார்த்துக் கொள்கிறார். இந்த விழாவிற்கு அவர் வந்ததற்கு தலை வணங்குகிறேன்,” என்றார்.
ஜுனியர் என்டிஆர், பாலகிருஷ்ணா இருவரும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்ததற்கு இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.