டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அர்ஜுன் மீது தொடர்ந்து பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அதனை அர்ஜுன் கடுமையாக மறுத்திருப்பதுடன் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பாலியல் புகார்களுக்கு அர்ஜுன் பெருந்தன்மையுடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
அர்ஜுன், தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகர், அனுபவம் வாய்ந்த நடிகர் அதை நாம் மறந்து விடக்கூடாது. அதே நேரத்தில் பாலியல் புகார் கூறியுள்ளவர்களின் மனநிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை இத்தனை நாள் தங்களுக்குள்ளேயே புதைத்து வைத்துக் கொண்டு அந்த வலியுடனேயே வாழ்ந்திருக்கிறார்கள்.
தன் மீதான பாலியல் புகாரை அர்ஜுன் மறுத்தாலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அது அவரது பெருந்தன்மையை காட்டும். பெண்களால் முன்னெடுக்கப்படும் மீ டூ இயக்கம் வருங்காலத்தில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டும்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.