ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி தற்போது பேட்ட படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு தனது போயஸ்கார்டன் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். 4 நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் அவர் பேரன்களுடன் பொழுதை கழித்து வருகிறார். நேற்று தனது பேரன் வேத் கிருஷ்ணாவுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வேத் கிருஷ்ணா தாத்தாவிடம் ஆட்டோவில் போக வேண்டும் என்கிற தன் ஆசையை கூறியிருக்கிறான்.
உடனே ரஜினி தன் கார் டிரைவர் மூலம் ஒரு ஆட்டோவை வரவழைத்து அதில் அவரும், பேரனும், மகள் சவுந்தர்யாவும் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஆழ்வார் பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றனர். பேரன் வேத் வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவதை ரசித்தபடி ரஜினி சென்றுள்ளார். அவர்களின் பாதுகாப்பிற்காக காரில் பாதுகாவலர்கள் பின் தொடர்ந்துள்ளனர். ஆட்டோவில் ரஜினி குடும்பத்துடன் பயணிப்பதை பொது மக்கள் சிலர் கண்டுபிடித்து அவரை பார்த்து கை அசைத்தனர். ரஜினியும் பதிலுக்கு கை அசைத்தார்.